sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் தீவிரம்: முன்னாள் பார்லி சபாநாயகர் சுட்டுக்கொலை

/

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் தீவிரம்: முன்னாள் பார்லி சபாநாயகர் சுட்டுக்கொலை

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் தீவிரம்: முன்னாள் பார்லி சபாநாயகர் சுட்டுக்கொலை

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் தீவிரம்: முன்னாள் பார்லி சபாநாயகர் சுட்டுக்கொலை

2


ADDED : ஆக 30, 2025 04:46 PM

Google News

2

ADDED : ஆக 30, 2025 04:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீவ்: உக்ரைனில் 500க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. உக்ரைனின் முன்னாள் பார்லிமென்ட் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி சுட்டுக் கொல்லப்பட்டார்.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி எடுத்தார். ஆனால் ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் மீதான தாக்குதலை இன்னும் நிறுத்தவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.

உக்ரைனில் உள்ள கட்டடங்கள் மற்றும் ட்ரோன் தயாரிப்பு நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. தெற்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 28 பேர் காயமடைந்தனர்.

முன்னாள் பார்லிமென்ட் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி லிவிவ் உயிரிழந்தார். இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரது குடும்பத்தினருக்கு அதிபர் ஜெலன்ஸ்கி இரங்கல் தெரிவித்துள்ளார். கொலையாளியைத் தேடும் பணி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us