ADDED : ஏப் 02, 2024 10:04 PM
நொய்டா:புதுடில்லி - நொய்டா விரைவுச் சாலையில், உரிய ஆவணம் இல்லாமல் காரில் எடுத்துச் செல்லப்பட்ட 11.58 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீஸ் வாகன சோதனை நடத்தி, உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருட்கள் ஆகியவற்ரை பறிமுதல் செய்து வருகின்றனர்.
புதுடில்லி - நொய்டா விரைவுச் சாலையில், சிர்சாவில் போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர். டில்லி பதிவு எண் கொண்ட காரில் இருந்த 11.58 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
டில்லி பதர்பூரில் வசிக்கும் ராகேஷ் குமார் என்பவர் பெயரில் இந்தக் கார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட 11.58 லட்சம் ரூபாய் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

