90 கிலோ போதைப்பொருட்களை கடத்திய 14 பாகிஸ்தானியர்கள்: குஜராத்தில் கைது
90 கிலோ போதைப்பொருட்களை கடத்திய 14 பாகிஸ்தானியர்கள்: குஜராத்தில் கைது
ADDED : ஏப் 28, 2024 03:43 PM

ஆமதாபாத்: குஜராத் கடற்கரையில், 90 கிலோ போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
குஜராத் கடற்கரையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத தடுப்பு படையினர் இணைந்து நடத்திய நடவடிக்கையில், குஜராத் கடற்கரையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை கண்டுபிடித்தனர். சுமார் 90 கிலோ போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு மே மாதம், பாகிஸ்தானில் இருந்து வந்த கப்பலில் இருந்து ரூ.12000 கோடி மதிப்பிலான 2500 கிலோமெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளை என்சிபி கைப்பற்றியது. கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி, குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு மட்டும் குஜராத்தில் கடலோர போலீசாரால் இதுவரை ரூ.3.400 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

