sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஓட்டு எண்ணும் நாளில் 144 தடை உத்தரவு

/

ஓட்டு எண்ணும் நாளில் 144 தடை உத்தரவு

ஓட்டு எண்ணும் நாளில் 144 தடை உத்தரவு

ஓட்டு எண்ணும் நாளில் 144 தடை உத்தரவு


ADDED : மே 28, 2024 06:23 AM

Google News

ADDED : மே 28, 2024 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் ஜூன் 4ம் தேதி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில், 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் ஜூன் 4ம் தேதி, ஓட்டு எண்ணிக்கை நடக்கும். மாநிலம் முழுதும் 28 ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில், மூன்று லோக்சபா தொகுதிகள் உள்ளதால், மூன்று ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பெங்., சென்ட்ரல் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை, வசந்த்நகரில் உள்ள மவுன்ட் கார்மல் கல்லுாரியிலும்; பெங்., வடக்கு தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை, விட்டல் மல்லையா சாலையின் செயின்ட் ஜோசப் இண்டியன் உயர்நிலைப் பள்ளியிலும்; பெங்., தெற்கு தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை, ஜெயநகர் எஸ்.எஸ்.எம்.ஆர்.வி., கல்லுாரியிலும் நடக்க உள்ளன.

இந்நிலையில், நகர் முழுதும், அன்று காலை 6:00 மணி முதல், நள்ளிரவு 12:00 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று உத்தரவிட்டார்.

இதுபோன்று, மற்ற நகரங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us