ADDED : ஏப் 24, 2024 08:38 PM
ஷாஜகான்பூர்:உத்தர பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து இரண்டு பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உ.பி., மாநிலம் பிஹாரிபூர் மற்றும் அசிமாபாத் ஆகிய கிராமங்களை சேர்ந்த 22 பேர், கப்செண்டா கிராமத்தில் நடந்த கண்காட்சிக்கு டிராக்டரில் நேற்று முன் தினம் காலை சென்றனர். இரவு ஊருக்கு திரும்பினர்.
தில்ஹரின் - நிகோஹி சாலையில் ஜான்யூரி கிராமம் அருகே டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், அமித்குமார்,40, முரளி,60, ஆகிய இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். காயம் அடைந்த 6 பெண்கள் உள்பட 20 பேர் ஷாஜகான்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், காயம் அடைந்தோருக்கு தீவிர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

