sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நடுக்கடலில் படகில் தீ 20 மீனவர்கள் தப்பினர்

/

நடுக்கடலில் படகில் தீ 20 மீனவர்கள் தப்பினர்

நடுக்கடலில் படகில் தீ 20 மீனவர்கள் தப்பினர்

நடுக்கடலில் படகில் தீ 20 மீனவர்கள் தப்பினர்


ADDED : மார் 01, 2025 01:27 AM

Google News

ADDED : மார் 01, 2025 01:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தானே: மஹாராஷ்டிரா மாநிலம் தானே அருகே, நடுக்கடலில் சென்ற படகில் தீ விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய மீனவர்கள் 20 பேரை, கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் தானே அருகே அலிபாக் பகுதியைச் சேர்ந்தவர், ராகேஷ் மூர்த்தி. இவருக்கு சொந்தமான படகில் நேற்று, 20 மீனவர்கள் மீன்பிடிக்க நடு கடலுக்கு சென்றனர். அவர்கள் சென்ற படகில் உள்ள பேட்டரி வயர்களில் மின் கசிவு ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட தீப்பொறி படகில் குவித்து வைக்கப்பட்டிருந்த வலைகளில் பற்றி, படகு முழுதும் பரவியது. தீயை அணைக்க முயன்று முடியாததால் மீனவர்கள் கடலில் குதித்து தத்தளித்தனர். படகு தீப்பற்றி எரிவதை பார்த்த அருகே இருந்த மீனவர்கள், கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர்.

கடற்படையினர், மீனவர்களை பத்திரமாக மீட்டதுடன், படகில் பற்றிய தீயை அணைத்து கரைக்கு இழுத்து வந்தனர். இருப்பினும், படகின் உள்பகுதி எரிந்து சேதமானது.






      Dinamalar
      Follow us