sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

26 சனிக்கிழமைகளிலும் முழு நாளும் பள்ளி, கல்லுாரி?

/

26 சனிக்கிழமைகளிலும் முழு நாளும் பள்ளி, கல்லுாரி?

26 சனிக்கிழமைகளிலும் முழு நாளும் பள்ளி, கல்லுாரி?

26 சனிக்கிழமைகளிலும் முழு நாளும் பள்ளி, கல்லுாரி?


ADDED : ஆக 13, 2024 07:19 AM

Google News

ADDED : ஆக 13, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தட்சிண கன்னடா: கன மழையால் பள்ளி, பி.யு., கல்லுாரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையால், 26 வாரங்களுக்கு சனிக்கிழமையன்று முழு நாள் பள்ளி, கல்லுாரிகள் இயங்க, கல்வி துறை ஆலோசித்து வருகிறது.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழையால், மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகள் 13 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. தற்போது மழை குறைந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் 26 சனிக் கிழமையன்று முழு நேரம் பள்ளி, கல்லுாரிகள் நடத்த, கல்வி துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:

பல ஆண்டுகளாக, தட்சிண கன்னடாவில் பருவமழைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே விடுமுறைகள் வருவதால், மாணவர்கள் பாடம் கற்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. இருப்பினும் கூடுதல் வகுப்புகள் மூலம் இதை ஈடுசெய்ய, கடந்த காலங்களில் செயல்படவில்லை.

எனவே, பள்ளி, பி.யு., கல்லுாரிகளுக்கு, நடப்பு கல்வியாண்டில் அடுத்து வரும் 26 சனிக்கிழமைகளிலும் முழு நாள் வகுப்புகள் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பி.யு., கல்லுாரிகளுக்கு சனிக்கிழமை முழு நாளும், தேவைப்பட்டால் ஞாயிற்று கிழமை அரை நாளும் நடத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

ஆயினும், சி.இ.டி., நீட், ஜே.இ.இ., தேர்வுகளுக்கு தயாராக, பயிற்சி செய்ய உள்ள அறிவியல் மாணவர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாவட்ட கல்வி அலுவலர் கூறுகையில், '10ம் வகுப்பு, பி.யு.சி., மாணவர்களுக்கு தினமும் காலை, மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இது தொடர்பாக பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us