sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விதவை அடித்து கொலை 26 வயது காதலன் கைது

/

விதவை அடித்து கொலை 26 வயது காதலன் கைது

விதவை அடித்து கொலை 26 வயது காதலன் கைது

விதவை அடித்து கொலை 26 வயது காதலன் கைது


ADDED : ஜூன் 18, 2024 06:33 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'பேஸ்புக்' மூலமாக துவங்கிய நெருக்கம், பெண்ணின் கொலையில் முடிந்தது.

ஷிவமொகாவை சேர்ந்தவர் மமதா, 48; கணவரை இழந்தவர். இவருக்கு விஜயபுராவை சேர்ந்த ரேவண சித்தையா, 26, பேஸ்புக்கில் அறிமுகம் ஆனார். இந்த அறிமுகம் நட்பானது. நட்பு காதலானது. இதை பயன்படுத்தி, மமதாவிடம் லட்சக்கணக்கான ரூபாய் வாங்கினார்.

இந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை. பணத்தை கேட்டதால் மமதாவுடன் தகராறு செய்தார். இதனால் இவர்களிடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இதற்கிடையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, மமதா நச்சரிக்க துவங்கினார். இதனால், ரேவண சித்தையா கோபம் அடைந்தார்.

'திருமண விஷயமாக பேசலாம்' என, கூறி ஜூன் 2ல் பாகல்கோட், பீளகியின் கோல்ஹர் அருகில் கிருஷ்ணா ஆற்றங்கரைக்கு மமதாவை அழைத்து சென்றார். அங்கு அவரை அடித்து கொலை செய்து, உடலை அங்கேயே வீசிவிட்டு தலைமறைவானார்.

அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் கிடப்பதாக, அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கூறினர். அங்கு வந்த பீளகி போலீசார், உடலை மீட்டு விசாரணையை துவக்கினர். அப்பெண் ஷிவமொகாவை சேர்ந்த மமதா என்பது தெரிந்தது. இவரது மொபைல் போன் தகவல்களை வைத்து விசாரித்த போது, ரேவண சித்தையா பற்றி தெரியவந்தது.

அவரை பிடித்து விசாரித்த போது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us