sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லஞ்ச டாக்டருக்கு 4 ஆண்டு சிறை

/

லஞ்ச டாக்டருக்கு 4 ஆண்டு சிறை

லஞ்ச டாக்டருக்கு 4 ஆண்டு சிறை

லஞ்ச டாக்டருக்கு 4 ஆண்டு சிறை


ADDED : மே 30, 2024 06:40 AM

Google News

ADDED : மே 30, 2024 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: அறுவை சிகிச்சை செய்ய, லஞ்சம் கேட்ட அரசு மருத்துவமனை டாக்டருக்கு, நான்காண்டுகள் சிறை தண்டனை விதித்து, மைசூரு நீதிமன்றம்தீர்ப்பளித்தது.

மைசூரின், கே.ஆர்., மருத்துவமனையில், 2017ல் தேவராஜ் என்பவரின் உறவினர், எலும்பு தொடர்பான அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய, 40,000 ரூபாய் லஞ்சம் வேண்டுமென, அம்மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் புட்டசாமி கேட்டார்.

இதுதொடர்பாக, ஏ.சி.பி.,யில் தேவராஜ் புகார் அளித்தார். 2017 ஏப்ரல் 12ல், இவர் 26,000 ரூபாயை புட்டசாமியிடம் கொடுத்தபோது, ஏ.சி.பி., அதிகாரிகள், கையும் களவுமாக பிடித்தனர்.

விசாரணை முடித்து, மைசூரின் மூன்றாவது மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். புட்டசாமியின் குற்றம் உறுதியானதால், அவருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us