sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வயலில் தேங்கிய நீரை குடித்த 50 ஆடுகள் பலி

/

வயலில் தேங்கிய நீரை குடித்த 50 ஆடுகள் பலி

வயலில் தேங்கிய நீரை குடித்த 50 ஆடுகள் பலி

வயலில் தேங்கிய நீரை குடித்த 50 ஆடுகள் பலி


ADDED : ஏப் 30, 2024 10:24 PM

Google News

ADDED : ஏப் 30, 2024 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலார்: தாகத்தை தணிக்க வயலில் தேங்கியிருந்த தண்ணீரை குடித்த 50 ஆடுகள் பலியாகின.

கோலார் உரிகிளி நாகநாளா என்ற கிராமத்தில் வெங்கடம்மா, மஞ்சுளா, நரசிம்மையா, ஆரத்தி, வசந்த ராஜு ஆகியோர் ஒன்றாக இணைந்து வயல் பகுதியில் ஆடுகளை மேய்ப்பது வழக்கம். நேற்றும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வயலில் தேங்கி இருந்த தண்ணீரை ஆடுகள் குடித்தன.

சில நிமிடங்களில், தண்ணீர் குடித்த ஆடுகள் சுருண்டு விழுந்தன. இது பற்றி தகவல் அறிந்த ஆடுகளின் உரிமையாளர்கள், கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த கால்நடை மருத்துவர்கள், மயக்கத்தில் இருந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

இருந்தும் 50 ஆடுகளின் வயிறு வீக்கம் அடைந்து உயிரிழந்தன. 13 ஆடுகள் மட்டுமே உயிர் பிழைத்தன.

கால்நடைத் துறை கோலார் மாவட்ட இணை இயக்குனர் கங்கா துளசி, அதிகாரிகள் ராமையா, வெங்கடேஷ் மற்றும் ஊழியர்கள் ஆடுகளின் ரத்தங்களை எடுத்து பரிசோதனைக்குப் அனுப்பி வைத்தனர்.

அரசின் நிவாரணம் பெற்று தருவதாக உறுதி அளித்தனர்.

ஆடுகள் குடித்த தண்ணீரில் ரசாயனம் கலந்திருப்பதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us