sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கும்பமேளா சென்று திரும்பிய பக்தர்கள் 6 பேர் பலி

/

கும்பமேளா சென்று திரும்பிய பக்தர்கள் 6 பேர் பலி

கும்பமேளா சென்று திரும்பிய பக்தர்கள் 6 பேர் பலி

கும்பமேளா சென்று திரும்பிய பக்தர்கள் 6 பேர் பலி


ADDED : பிப் 25, 2025 03:31 AM

Google News

ADDED : பிப் 25, 2025 03:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராட கோடிக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.

கர்நாடக மாநிலம் பெலகாவியின் கோகாக் அருகே கமடகி கிராமத்தின், பாலசந்திர நாராயண் கவுடர், 50, பசவராஜ் சிவப்பா தொட்டமணி, 49.

விருபாக் ஷப்பா சென்னப்பா குமட்டி, 61, சுனில் பாலகிருஷ்ணா, 45, பசவராஜ் நிருபதப்பா குரலி, 63, சரணப்பா சிபரட்டி, 27, ஆகியோர், கோகாக்கில் இருந்து ஜீப்பில் பிரயாக்ராஜ் சென்றனர்.

கும்பமேளாவில் பங்கேற்று விட்டு, பெலகாவிக்கு திரும்பி வந்தனர். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள பெஹ்ரா டோல் நாகா என்ற இடத்தில், நேற்று அதிகாலையில் ஜீப் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த மினி பஸ்சும், ஜீப்பும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த ஆறு பேரும் உயிரிழந்தனர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us