sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆந்திரா சாலை விபத்து பஸ் எரிந்து 6 பேர் பலி

/

ஆந்திரா சாலை விபத்து பஸ் எரிந்து 6 பேர் பலி

ஆந்திரா சாலை விபத்து பஸ் எரிந்து 6 பேர் பலி

ஆந்திரா சாலை விபத்து பஸ் எரிந்து 6 பேர் பலி


ADDED : மே 16, 2024 12:13 AM

Google News

ADDED : மே 16, 2024 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி: ஆந்திராவில், மணல் லாரி மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம், பலநாடு மாவட்டம், சிலகலுாரிபேட்டா பகுதியில் நேற்று முன்தினம் மணல் லாரி மீது தனியார் பஸ் மோதியது.

சின்னகஞ்சம் பகுதியில் இருந்து பயணியரை ஏற்றிக்கொண்டு ஹைதராபாதிற்கு அந்த பஸ் சென்று கொண்டிருந்தது.

தேர்தலுக்காக சொந்த ஊர் சென்ற பலரும் அந்த பஸ்சில் ஹைதராபாத் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

பலநாடு மாவட்டம் சிலகலுாரிபேட்டா அருகே சென்ற போது, எதிரே மணல் ஏற்றி வந்த லாரி மீது பஸ் மோதியது.

விபத்து நடந்த சில வினாடிகளில் பஸ் தீப் பிடித்து எரிய துவங்கியது.

இந்த விபத்தில் பஸ் மற்றும் லாரின் ஓட்டுனர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.

காயங்களுடன் 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.

தகவல் கிடைத்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள் பஸ்சும், லாரியும் முற்றிலுமாக எரிந்து உருக்குலைந்தன.






      Dinamalar
      Follow us