ADDED : ஏப் 13, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: பங்கார்பேட்டை தம்மேனஹள்ளியில் கிருஷ்ணப்பா கொலை வழக்கில் வெங்கடேஷ் கவுடா என்பவர், 2022 பிப்ரவரி 22ல் இருந்து தங்கவயல் சிறையில் விசாரணை கைதியாக இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த சிறை அதிகாரிகள், வெங்கடேஷ் கவுடாவை சிகிச்சைக்காக ராபர்ட்சன் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அவருக்கு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சைக்கு பெங்களூருக்கு அழைத்துச் செல்லுமாறு டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.
இதையடுத்து, அவர், பெங்களூரு ஜெயதேவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

