sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆம் ஆத்மி பிரமுகர் சுட்டுக்கொலை

/

ஆம் ஆத்மி பிரமுகர் சுட்டுக்கொலை

ஆம் ஆத்மி பிரமுகர் சுட்டுக்கொலை

ஆம் ஆத்மி பிரமுகர் சுட்டுக்கொலை


ADDED : ஜூன் 02, 2024 02:02 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமிர்தசரஸ்:பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாபின் அஜ்னாலா அருகே லகுவால் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபிந்தர் சிங். இவர், சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.

பஞ்சாபில் உள்ள 13 லோக்சபா தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, பைக்கில் லகுவால் கிராமத்துக்கு வந்த இருவர், வீட்டு வாசலில் அமர்ந்திருந்த தீபிந்தர் சிங் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அவர் அருகே இருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த தீபிந்தர் அதே இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், காயம் அடைந்த நான்கு பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us