sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கையெழுத்து இயக்கம் துவங்கியது ஆம் ஆத்மி

/

கையெழுத்து இயக்கம் துவங்கியது ஆம் ஆத்மி

கையெழுத்து இயக்கம் துவங்கியது ஆம் ஆத்மி

கையெழுத்து இயக்கம் துவங்கியது ஆம் ஆத்மி


ADDED : மே 03, 2024 02:02 AM

Google News

ADDED : மே 03, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:கட்சியின் தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை ஆம் ஆத்மி கட்சி துவங்கியுள்ளது.

மதுபானக் கொள்கை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது மே 7 வரை திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைதை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கத்தை துவங்கியுள்ளது.

இதற்காக கெஜ்ரிவாலுக்கு தாங்கள் தெரிவிக்க விரும்பும் செய்திகளை மக்கள் தெரிவிப்பதற்காக லஜ்பத் நகரில் இரண்டு வெள்ளை பலகைகளை ஆம் ஆத்மி வைத்துள்ளது.

''தங்கள் முதல்வரை டில்லி மக்கள் நேசிக்கிறார்கள் என்பதை பா.ஜ.,வுக்கு உணர்த்தும் வகையில் நகரின் பல்வேறு பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்,'' என, ஆம் ஆத்மி ஜங்புரா எம்.எல்.ஏ., பிரவீன் குமார் கூறினார்.

நிகழ்ச்சியில், 'சிறைக்கான பதில் ஓட்டு மூலம்; அரவிந்த் கெஜ்ரிவால் ஜிந்தாபாத்' ஆகிய வாசகங்களை அந்த பலகையில் கட்சித் தொண்டர்கள் எழுதினர்.






      Dinamalar
      Follow us