ADDED : ஆக 06, 2024 01:07 AM

மும்பை: மஹாராஷ்டிரா தேர்தலையொட்டி தேசியவாத காங்.,கட்சி தலைவர் அஜித்பவார் ‛ஜன் சன்மான் யாத்திரை துவக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இம்மாநிலத்திற்கு விரைவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆளுங்கட்சியாக உள்ள ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா ,பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணி, மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எதிர்க்கட்சியான ‛‛மஹா விஹாஸ் அகாடி'' கூட்டணியில் உள்ள காங்கிரஸ், உத்தவ் பாலசாகேப் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் உள்ளிட்ட கட்சிகள், இந்த சட்டசபை தேர்தலை எதிர்க்கொள்ள உள்ளன.
இந்நிலையில் ஆளும் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்., கட்சி எம்.பி. சுனில் தாக்கரே கூறியது, வரும் 8-ம் தேதி நாசிக் நகரிலிருந்து ஜன் சன்மான் யாத்திரையை அஜித் பவார் துவக்குகிறார். இந்த யாத்திரை விதர்பா, மரத்வாடா உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் வழியாக நடக்கிறது என்றார்.