sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'நாட்டின் வளர்ச்சியில் அசாம் பங்கு மகத்தானது' முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் பேச்சு

/

'நாட்டின் வளர்ச்சியில் அசாம் பங்கு மகத்தானது' முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் பேச்சு

'நாட்டின் வளர்ச்சியில் அசாம் பங்கு மகத்தானது' முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் பேச்சு

'நாட்டின் வளர்ச்சியில் அசாம் பங்கு மகத்தானது' முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் பேச்சு

2


ADDED : பிப் 26, 2025 02:13 AM

Google News

ADDED : பிப் 26, 2025 02:13 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவஹாத்தி, “நம் நாட்டின் வெற்றி சரித்திரத்தில் அசாம் முக்கிய பங்காற்றி உள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலமான அசாமில், 'அட்வான்டேஜ் அசாம் 2.0' என்ற முதலீட்டு மற்றும் உட்கட்டமைப்பு மாநாட்டை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

உலகளாவிய ஸ்திரத்தன்மை இல்லாத நிலையிலும், இந்தியா வேகமாக வளர்கிறது என்பதை நிபுணர்கள் ஒருமனதாக ஒப்புக்கொள்கின்றனர்.

இந்த நுாற்றாண்டின் அடுத்த 25 ஆண்டுகளை இலக்காக வைத்து, நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம். நம் இளைஞர்கள் புதுமைகளை படைப்பவர்களாகவும், திறன் கொண்டவர்களாகவும் உள்ளனர். அவர்கள் மேல் இந்த உலகமே அதிக நம்பிக்கை வைத்துள்ளது.

நம் உள்ளூர் வினியோகத் தொடரை வலுப்படுத்தி பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்த ஒப்பந்தம் போட்டு வருகிறோம். கிழக்கு ஆசியாவுடனான நம் வலுவான தொடர்பும், புதிதாகத் திறக்கப்பட்ட, இந்தியா- - மத்திய கிழக்கு - -ஐரோப்பா பொருளாதார வழித்தடமும் புதிய வாய்ப்புகளை அளிக்கின்றன.

நம் நாட்டின் வளர்ச்சியில் அசாமின் பங்கு அதிகரித்து வருகிறது. தற்போது, 6 லட்சம் கோடி ரூபாய் வரை பொருளாதாரத்தை உயர்த்தி உள்ளது.

கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சிறந்த முதலீட்டுக்கான சூழலில் அசாம் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த 2009 - 14 வரை, அசாம் ரயில்வே பட்ஜெட் ஆண்டுக்கு சராசரியாக, 2,100 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது அது 10,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின், 60 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. குவஹாத்தி - ஜல்பாய்குரி இடையே முதன்முறையாக மிதமான விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவின்போது, அசாம் அரசு சார்பில் மாநிலத்தின் பாரம்பரிய உடையும், அங்குள்ள காமாக்யா கோவிலின் மாதிரி வடிவிலான நினைவுப் பரிசையும், பிரதமர் மோடிக்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அளித்தார்.

அசாம் மாநில அரசின் விலங்காக திகழும் ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தின் தோற்றத்துடன், செமிகண்டக்டர் சிப்களில் உருவாக்கப்பட்ட சிலையையும் பிரதமர் மோடிக்கு அவர் வழங்கினார்.






      Dinamalar
      Follow us