sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பசவராஜ் பொம்மை மத்திய அமைச்சராவார் பா.ஜ., --- எம்.எல்.சி., விஸ்வநாத் நம்பிக்கை

/

பசவராஜ் பொம்மை மத்திய அமைச்சராவார் பா.ஜ., --- எம்.எல்.சி., விஸ்வநாத் நம்பிக்கை

பசவராஜ் பொம்மை மத்திய அமைச்சராவார் பா.ஜ., --- எம்.எல்.சி., விஸ்வநாத் நம்பிக்கை

பசவராஜ் பொம்மை மத்திய அமைச்சராவார் பா.ஜ., --- எம்.எல்.சி., விஸ்வநாத் நம்பிக்கை


ADDED : மே 06, 2024 03:41 AM

Google News

ADDED : மே 06, 2024 03:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாவேரி : ''பா.ஜ., வேட்பாளர் பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றால், மத்திய அமைச்சராகும் யோகம் உள்ளது,'' என பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் தெரிவித்தார்.

ஹாவேரியில் நேற்று அவர் கூறியதாவது:

கர்நாடகாவில் முதல்வராக இருந்த கெங்கல் ஹனுமந்தையா, அதன் பின் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, ரயில்வே அமைச்சரானார். வீரப்ப மொய்லி, பெட்ரோலிய துறை அமைச்சராக பதவி வகித்தார்.

இது போன்று, முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றால், மத்திய அமைச்சராகும் யோகம் உள்ளது. பொறுமை, சகிப்பு தன்மை, மக்களை நேசிக்கும் குணம் உள்ளது. மாநில வளர்ச்சி குறித்து லோக்சபாவில் குரல் கொடுக்க வேண்டும்.

இவர் முதல்வராக இருந்த போது, ஆடு மேய்ப்போரின் நலனுக்காக, 300 கோடி ரூபாய் செலவில் திட்டம் வகுத்தார். இதனால் 20,000 குடும்பங்கள் பயன் அடைந்திருக்கும். ஆனால் காங்கிரஸ் அரசு வந்த பின், திட்டம் நிறுத்தப்பட்டது.

குருபர் சமுதாயத்தின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்திய பெருமை, பா.ஜ.,வையே சாரும். காகிநெலே வளர்ச்சி ஆணையம் அமைத்தது, அன்றைய முதல்வர் எடியூரப்பா. தைரியம், விடா முயற்சி என, இரண்டும் இருந்ததால் மக்கள் தலைவராக இருக்கிறார்.

இவ்வாறு அவர்கூறினார்.






      Dinamalar
      Follow us