sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போலீசை அவமதித்து 'டாட்டூ' கடை ஊழியர் மீது வழக்கு

/

போலீசை அவமதித்து 'டாட்டூ' கடை ஊழியர் மீது வழக்கு

போலீசை அவமதித்து 'டாட்டூ' கடை ஊழியர் மீது வழக்கு

போலீசை அவமதித்து 'டாட்டூ' கடை ஊழியர் மீது வழக்கு


ADDED : ஜூலை 21, 2024 07:24 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: போலீசாரை அவமதிக்கும் வகையில் ஒரு வாலிபருக்கு 'டாட்டூ' போட்டுவிட்ட கடை ஊழியர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.

பெங்களூரு, பிரிகேட் சாலையில் 'டாட்டூ சூத்ரா' என்ற பெயரில், டாட்டூ குத்தும் கடை செயல்பட்டு வருகிறது.

இந்த கடையின் பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் உள்ளது. அந்த பக்கத்தில், கடைக்கு வந்து டாட்டூ போட்டுக் கொள்வோரின் வீடியோக்கள் பதிவிடப்படும்.

அந்த வகையில், அந்த வகையில், தன் நெஞ்சில் போலீசாரை அவமதிக்கும் வகையில், ஒரு வாலிபர் டாட்டூ போட்டிருந்த படமும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது. இதுபற்றி கப்பன் பார்க் போலீசாருக்கு தெரிந்தது.

நேற்று முன்தினம் இரவு டாட்டூ கடைக்கு சென்று விசாரித்தனர். வாலிபர் ஒருவருக்கு, டாட்டூ கலைஞர் ரித்தேஷ் என்பவர், டாட்டூ போட்டுவிட்டது தெரிய வந்தது.

இதையடுத்து ரித்தேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை நடக்கிறது. டாட்டூ போட்டுக் கொண்ட வாலிபரிடம் விசாரிக்கவும் போலீசார் தயாராகின்றனர்.






      Dinamalar
      Follow us