sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கெஜ்ரிவாலுக்கு ஜாமின் மறுப்பு சி.பி.ஐ., பதிலளிக்க உத்தரவு

/

கெஜ்ரிவாலுக்கு ஜாமின் மறுப்பு சி.பி.ஐ., பதிலளிக்க உத்தரவு

கெஜ்ரிவாலுக்கு ஜாமின் மறுப்பு சி.பி.ஐ., பதிலளிக்க உத்தரவு

கெஜ்ரிவாலுக்கு ஜாமின் மறுப்பு சி.பி.ஐ., பதிலளிக்க உத்தரவு


ADDED : ஆக 15, 2024 01:05 AM

Google News

ADDED : ஆக 15, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, மதுபான ஊழல் தொடர்பான சி.பி.ஐ., வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது; இது தொடர்பாக பதிலளிக்கும்படி சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டுள்ளது.

டில்லி அரசின் மதுபானக் கொள்கையை மாற்றியமைத்ததில் மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன. இவை தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறையும் விசாரிக்கிறது.

இந்த வழக்கில், ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறை வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் இடைக்கால ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புய்யான் அமர்வு நேற்று விசாரித்தது. இடைக்கால ஜாமின் வழங்க மறுத்த அமர்வு, சி.பி.ஐ., பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணை, 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதே வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, எம்.பி.,யான சஞ்சய் சிங் ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கெஜ்ரிவாலுக்கும் ஜாமின் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.






      Dinamalar
      Follow us