sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சி.இ.டி., தேர்வில் பாடங்கள் சாராத கேள்வி: ஆய்வுக்கு வல்லுனர் குழு

/

சி.இ.டி., தேர்வில் பாடங்கள் சாராத கேள்வி: ஆய்வுக்கு வல்லுனர் குழு

சி.இ.டி., தேர்வில் பாடங்கள் சாராத கேள்வி: ஆய்வுக்கு வல்லுனர் குழு

சி.இ.டி., தேர்வில் பாடங்கள் சாராத கேள்வி: ஆய்வுக்கு வல்லுனர் குழு


ADDED : ஏப் 23, 2024 06:04 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : சி.இ.டி., தேர்வில் பாடங்கள் சாராத கேள்விகளை கேட்டது குறித்து, ஆய்வு செய்ய மாநில அரசு, வல்லுனர் கமிட்டி அமைத்துள்ளது.

இது தொடர்பாக, உயர் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை:

கர்நாடக தேர்வு ஆணையம், ஏப்ரல் 18 மற்றும் 19ல், சி.இ.டி., தேர்வு நடத்தியது. மாநிலம் முழுதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்கள் சம்பந்தப்பட்ட வினாத்தாளில், பாடங்கள் சாராத கேள்விகள் இருந்ததாக தகவல் வந்துள்ளது.

பாடங்களில் இல்லாத கேள்விகள் இருந்ததால், மாணவ - மாணவியர் பாதிப்படைந்ததாக, புகார்கள் வந்துள்ளன. எனவே மறு தேர்வு நடத்தும்படி வேண்டுகோள் வந்துள்ளது. கேள்விகள் குறித்து ஆட்சேபனை தெரிவிக்க, ஏப்ரல் 27 வரை மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சி.இ.டி., பாடத் திட்டங்கள் சாராத கேள்விகள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த, வல்லுனர் கமிட்டியை அரசு அமைத்துள்ளது. வல்லுனர் கமிட்டி அறிக்கை அடிப்படையில், மாணவர்களின் நலனை மனதில் கொண்டு அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us