sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிக்கமகளூரு சுற்றுலா பயணியருக்கு போலீஸ் துறை கட்டுப்பாடுகள் விதிப்பு

/

சிக்கமகளூரு சுற்றுலா பயணியருக்கு போலீஸ் துறை கட்டுப்பாடுகள் விதிப்பு

சிக்கமகளூரு சுற்றுலா பயணியருக்கு போலீஸ் துறை கட்டுப்பாடுகள் விதிப்பு

சிக்கமகளூரு சுற்றுலா பயணியருக்கு போலீஸ் துறை கட்டுப்பாடுகள் விதிப்பு


ADDED : ஜூலை 11, 2024 04:25 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கமகளூரு : சிக்கமகளூரு வரும் சுற்றுலா பயணியர் ஒழுங்கின்றி நடந்து கொள்கின்றனர். இவர்களுக்கு போலீஸ் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

சிக்கமகளூரில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணியர் மனம் போனபடி நடந்து கொள்கின்றனர். கார்கள், பைக்குகளை குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தி மற்ற வாகன பயணியருக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். மழைக்காலம் என்பதால், சாலைகளில் ஆங்காங்கே 'தற்காலிக நீர்வீழ்ச்சிகள்' உருவாகியுள்ளன.

வாகன பயணியர் நீர்வீழ்ச்சியை காணும் நோக்கில், வாகனங்களை சாலை நடுவிலேயே ஆங்காங்கே நிறுத்துகின்றனர். சாலையில் மதுபானம் அருந்திவிட்டு, ஆட்டம் போடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு தர்ம சங்கடம் ஏற்படுகிறது. எனவே சுற்றுலா பயணியருக்கு, சிக்கமகளூரு போலீஸ் துறை சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.

சிக்கமகளூரு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

வாகனத்தில் சிக்கமகளூருக்கு வரும் சில சுற்றுலா பயணியர், சாலையிலேயே வாகனத்தை நிறுத்தி, பார்ட்டி நடத்துகின்றனர். மதுபானம் அருந்தி நடனமாடி, மற்றவருக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர். இவர்கள் மீது கர்நாடக போலீஸ் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான விதிகளை, மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ளனர்.

சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கு தொந்தரவு தரக்கூடாது. சுற்றுலா இடங்களில் மதுபானம் அருந்தாதீர்கள். வாகனங்களை குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தக் கூடாது. பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் சிறுமியரை கேலி கிண்டல் செய்யாதீர்கள்.

இயற்கையை மதியுங்கள், ஒழுங்கை பின்பற்றுங்கள். வனத்துறை, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுகளை பின்பற்றுங்கள். அபாயமான இடங்களில் 'செல்பி' எடுக்க முயற்சிக்க கூடாது. சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாதீர்கள், வீசி எறியாதீர்கள். இயற்கை காட்சிகளை ரசித்துவிட்டு, பாதுகாப்பாக திரும்பிச் செல்லுங்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us