sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சட்டவிரோதமாக குடியிருக்கும் வங்கதேசத்தினர் மீது புகார்

/

சட்டவிரோதமாக குடியிருக்கும் வங்கதேசத்தினர் மீது புகார்

சட்டவிரோதமாக குடியிருக்கும் வங்கதேசத்தினர் மீது புகார்

சட்டவிரோதமாக குடியிருக்கும் வங்கதேசத்தினர் மீது புகார்

1


ADDED : ஆக 13, 2024 08:46 PM

Google News

ADDED : ஆக 13, 2024 08:46 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'பெங்களூரில் முறைகேடாக வசிக்கும் வங்கதேசத்தினரை, அவர்களின் நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்' என, போலீசில் ஸ்ரீராம சேனை அமைப்பினர் மனு அளித்துள்ளனர்.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குல் நடத்துவதை கண்டித்து, இந்தியாவில் உள்ள ஹிந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மூன்று நாட்களுக்கு முன், பெங்களூரில் மட்டுமே 150 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதற்கிடையில், 'பெங்களூரில் வங்கதேசத்தினர் முறைகேடாக வசிக்கின்றனர். அவர்களை வெளியேற்ற வேண்டும்' என, ஸ்ரீராம சேனை அமைப்புத் தலைவர் பிரமோத் முத்தாலிக், பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தாவை சந்தித்து நேற்று மனு அளித்தார்.

பின், அவர் கூறியதாவது:

முறைகேடாக பெங்களூரில் வசிக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். பெங்களூரில் மட்டுமே 4 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை வசிக்கின்றனர்.

எங்கெங்கு வசிக்கின்றனர் என்ற தகவல், கமிஷனருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்ராஜ்பேட்டையில் மட்டுமே ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் முறைகேடாக வசிக்கின்றனர்.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள், ஹிந்து கோவில்களை தாக்குவது கண்டிக்கத்தக்கது. இங்குள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களை வங்கதேசத்துக்கு அனுப்பவில்லை என்றால், நாங்களே வெளியேற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us