டில்லியில் காங்கிரசை கை கழுவும் தலைவர்கள்: தலைமைக்கு தலைவலி
டில்லியில் காங்கிரசை கை கழுவும் தலைவர்கள்: தலைமைக்கு தலைவலி
UPDATED : மே 01, 2024 01:10 PM
ADDED : மே 01, 2024 01:03 PM

புதுடில்லி: ஆம்ஆத்மி உடன் கூட்டணி வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி காங்கிரஸ் தலைவர்கள் 2 பேர் கட்சியில் இருந்து வெளியேறினர். சமீபத்தில் டில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பதவியை ராஜினாமா செய்தார். டில்லியில் காங்கிரசை தலைவர்கள் அடுத்தடுத்து கை கழுவி வருவதால், தலைமைக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. டில்லியில் ஆம்ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம்ஆத்மி கட்சி நிர்வாகிகள் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கை கழுவும் தலைவர்கள்
பல்வேறு ஊழல் சிக்கி உள்ள ஆம்ஆத்மி உடன் கூட்டணி வைத்திருப்பதற்கு டில்லி காங்., தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. சமீபத்தில் அர்விந்தர் சிங் லவ்லி, தன் டில்லி காங்., தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தங்கள் விருப்பத்திற்கு எதிராக ஆம் ஆத்மியுடன் கட்சி தலைமை கூட்டணி அமைத்ததை தன் ராஜினாமாவுக்கான காரணங்களில் ஒன்றாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், ஆம்ஆத்மி உடன் கூட்டணி வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி காங்கிரஸ் தலைவர்கள் 2 பேர் கட்சியில் இருந்து வெளியேறினர். இந்த இரண்டு பேரும் டில்லியில் இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கு பார்வையாளர்களாக இருந்தனர்.
தலைமைக்கு தலைவலி
நீரஜ் பசோயா மற்றும் நசீப் சிங் ஆகிய இரு தலைவர்களும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எழுதிய கடிதங்களில், கட்சிகளை விட்டு வெளியேறியதற்கு, காரணம் ஊழல் செய்து வரும் ஆம்ஆத்மியுடன் கூட்டணி வைத்திருப்பது தான் என குறிப்பிட்டுள்ளனர். அடுத்தடுத்து நிர்வாகிகள் ராஜினாமா, காங்கிரஸ் கட்சி தலைமைக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.
மே 25ம் தேதி தேர்தல்
டில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, கட்சியில் இருந்து இரண்டு தலைவர்கள் வெளியேறியது குறித்து டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. டில்லி உள்ள 7 லோக்சபா தொகுதிகளுக்கு வரும் மே 25ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.