sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'ஆன்லைன்' மோசடி தடுக்க  சைபர் டி.ஜி.பி., நியமனம்?

/

'ஆன்லைன்' மோசடி தடுக்க  சைபர் டி.ஜி.பி., நியமனம்?

'ஆன்லைன்' மோசடி தடுக்க  சைபர் டி.ஜி.பி., நியமனம்?

'ஆன்லைன்' மோசடி தடுக்க  சைபர் டி.ஜி.பி., நியமனம்?


ADDED : நவ 14, 2024 09:35 PM

Google News

ADDED : நவ 14, 2024 09:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு; மாநிலம் முழுதும் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்கு, கர்நாடகாவில் சைபர் குற்றப்பிரிவு டி.ஜி.பி., நியமனம் செய்யப்பட உள்ளார்.

இந்தியாவிலேயே முதன் முறையாக, கர்நாடகாவில் சைபர் குற்றபிரிவுக்கென்று, தனி டி.ஜி.பி., நியமிக்கப்பட உள்ளார். முதன் முதலில், சைபர் கிரைம் போலீஸ் நிலையம் கர்நாடகாவில் அமைக்கப்பட்டது.

மாநிலம் முழுதும் நடக்கும் சைபர் குற்றங்களை தடுக்க, போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதிய டி.ஜி.பி., நியமிக்கப்பட உள்ளார்.

தற்போது, மாநிலத்தில் நான்கு டி.ஜி.பி.,க்கள் உள்ளனர். புதிதாக நியமிக்கப்பட உள்ள ஐந்தாவது டி.ஜி.பி., சைபர் கிரைம், சி.இ.என்., எனும் பொருளாதாரம் மற்றும் போதைப்பொருள் குற்றப்பிரிவை கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்வார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சைபர் குற்றங்களை தடுக்க, சி.ஐ.டி., பிரிவுக்குள், சி.இ.என்., எனும் ஒரு புதிய பிரிவு உருவாக்கப்பட்டது. இப்பிரிவிற்கு, பிரணாப் மொஹந்தி ஏ.டி.ஜி.பி., தலைமை பொறுப்பேற்று வழிநடத்தினார்.

பெங்களூரில், நடப்பாண்டின் முதல் எட்டு மாதங்களில், 12,356 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளன. 1,242 கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளது. 'முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, 214 கோடி ரூபாய் அதிகம்' என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us