sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தலித் வாலிபர் குத்தி கொலை; சலுான் கடைக்காரர் கைது

/

தலித் வாலிபர் குத்தி கொலை; சலுான் கடைக்காரர் கைது

தலித் வாலிபர் குத்தி கொலை; சலுான் கடைக்காரர் கைது

தலித் வாலிபர் குத்தி கொலை; சலுான் கடைக்காரர் கைது


ADDED : ஆக 18, 2024 11:34 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொப்பால்: சலுான் கடையில் நடந்த தகராறில், கத்தரிகோலால் குத்தி தலித் வாலிபர் கொலை செய்யப்பட்டார். கடை உரிமையாளரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கொப்பால், யலபுர்கா சங்கனஹலா கிராமத்தில் வசித்தவர் யமனுார்சாமி பண்டிஹாலா, 27. தலித் சமூகத்தை சேர்ந்தவர். நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, முதகப்பா, 45 என்பவர் நடத்தி வரும் சலுான் கடைக்கு முடிதிருத்த சென்றார். கடைக்கு சென்ற சிறிது நேரத்தில், முதகப்பாவுக்கும், யமனுார்சாமிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

ஆத்திரம் அடைந்த முதகப்பா முடிதிருத்த பயன்படுத்தப்படும், கத்தரிகோலை எடுத்து, யமனுார்சாமியின் நெஞ்சில் பலமாக குத்தினார். ரத்தவெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். யலபுர்கா போலீசார் முதகப்பாவை கைது செய்தனர்.

விசாரணையில், முடி திருத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கொலை நடந்தது தெரிந்தது. ஆனால், யமனுார்சாமி தலித் என்பதால், அவருக்கு முடி திருத்த முதகப்பா மறுத்ததுடன், ஜாதியை சொல்லி திட்டி கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதுபற்றி முதகப்பாவிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us