sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிறையில் துாக்கமில்லாமல் டில்லி முதல்வர் அவதி

/

சிறையில் துாக்கமில்லாமல் டில்லி முதல்வர் அவதி

சிறையில் துாக்கமில்லாமல் டில்லி முதல்வர் அவதி

சிறையில் துாக்கமில்லாமல் டில்லி முதல்வர் அவதி

5


ADDED : ஏப் 03, 2024 01:34 AM

Google News

ADDED : ஏப் 03, 2024 01:34 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,

மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அறையில் சிறிது நேரம் மட்டுமே துாங்கியதாக, சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டில்லி மதுபான கொள்கை ஊழலில் தொடர்புடைய சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, மார்ச் 21ம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

நீதிமன்ற காவல்


அமலாக்கத் துறை காவல் முடிவடைந்ததை அடுத்து, நேற்று முன்தினம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, ஏப்., 15 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, திஹார் சிறையில் அறை எண் - 2ல் அவர் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறை அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:

நேற்று முன்தினம் மாலை, 4:00 மணி அளவில், திஹார் சிறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்து வரப்பட்டார். அறையில் அடைக்கப்படுவதற்கு முன், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது, அவரது சர்க்கரை அளவு 50க்கு கீழ் இருந்ததால், டாக்டர்களின் ஆலோசனையின் படி மருந்துகள் வழங்கப்பட்டன.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, இரவில், வீட்டில் சமைத்த உணவு வழங்கப்பட்டது. அவருக்கு ஒரு மெத்தை, போர்வைகள் மற்றும் இரண்டு தலையணைகள் வழங்கப்பட்டன.

அவர் சிறிது நேரம் சிமென்ட் தரையில் துாங்கினார். துாக்கம் வராததால், நள்ளிரவில் அறைக்குள் நடந்தபடியே இருந்தார். மதியம் மற்றும் இரவில், வீட்டில் சமைத்த உணவை சாப்பிட அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை எழுந்த உடன், அறையில் அரவிந்த் கெஜ்ரிவால் தியானம் செய்தார். அதன் பின் அவருக்கு தேநீர் மற்றும் இரண்டு பிஸ்கட்கள் வழங்கப்பட்டன.

கண்காணிப்பு கேமரா வாயிலாக, அவரை சிறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்; அறைக்கு வெளியே பாதுகாப்பு அதிகாரிகளும் உள்ளனர்.

ராஜினாமா


ராமாயணம், மகாபாரதம் மற்றும் பிரதமர்கள் எப்படி முடிவு செய்கின்றனர் ஆகிய புத்தகங்கள் அவருக்கு வழங்கப்பட்டன. மனைவி சுனிதா, அவரது குழந்தைகள், தனிச் செயலர் பிபவ் குமார், ஆம் ஆத்மி அமைப்பு பொதுச் செயலர் சந்தீப் பதக் ஆகியோரை சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே நேற்று, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவை, ஆம் ஆத்மியின், 62 எம்.எல்.ஏ.,க்களில், 55 பேர் சந்தித்தனர். அப்போது, 'இரண்டு கோடி டில்லி மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு துணையாக இருக்கின்றனர்.

'எக்காரணத்தைக் கொண்டும் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக் கூடாது' என, அவரிடம் எம்.எல்.ஏ.,க் கள் வலியுறுத்தினர்.

'பா.ஜ., எண்ணம் பலிக்காது'

டி

ல்லி அமைச்சர் ஆதிஷி நேற்று கூறியதாவது:நான் உட்பட, அமைச்சர் சவுரப் பரத்வாஜ், எம்.எல்.ஏ., துர்கேஷ் பதக், ராஜ்யசபா எம்.பி., ராகவ் சதா ஆகியோர், விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக, பா.ஜ.,வுக்கு நெருக்கமான நபர் என்னிடம் தெரிவித்தார். பா.ஜ.,வில் சேர்ந்தால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கலாம் என்றும் அவர் கூறினார். இதையெல்லாம் பார்த்து எங்களுக்கு பயமில்லை. ஆம் ஆத்மியை அழிக்க நினைக்கும் பா.ஜ.,வின் எண்ணம் பலிக்காது.இவ்வாறு அவர் கூறினார். எனினும் இந்த குற்றச்சாட்டை, பா.ஜ., திட்டவட்டமாக மறுத்துள்ளது.



ஜாமின்

மதுபான கொள்கை வழக்கில், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், ஆறு மாதங்களாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது ஜாமின் மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டாலும், அவரிடம் இருந்து எந்த பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை. அவரை விசாரணைக்கும் உட்படுத்தவில்லை. 'இதுபோன்ற சூழலில், அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது அவருக்கு ஜாமின் வழங்க அமலாக்கத் துறை எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து சஞ்சய் சிங்கிற்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதை ஆம் ஆத்மி வரவேற்றுள்ளது.








      Dinamalar
      Follow us