sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பட்டு போன மரங்களை அகற்றும்படி கோரிக்கை

/

பட்டு போன மரங்களை அகற்றும்படி கோரிக்கை

பட்டு போன மரங்களை அகற்றும்படி கோரிக்கை

பட்டு போன மரங்களை அகற்றும்படி கோரிக்கை


ADDED : ஆக 12, 2024 07:21 AM

Google News

ADDED : ஆக 12, 2024 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரு கப்பன் பூங்காவில் பட்டு போன மரங்களை, வெட்டி அகற்ற வேண்டும் என்று, நடைபயிற்சியில் ஈடுபடுவோர், மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பெங்களூரு விதான் சவுதாவுக்கு எதிரே, கப்பன் பூங்கா உள்ளது. பரந்து விரிந்து காணப்படும் இந்த பூங்காவில், ஏராளமான மரங்கள் உள்ளன. குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட, இங்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர்.

காலை, மாலையில் பூங்காவிற்குள் பலர், நடைபயிற்சியில் ஈடுபடுகின்றனர். நடைபயிற்சி முடிந்த பின், மரங்கள் அடியில் அமர்ந்து ஓய்வு எடுக்கின்றனர்.

கப்பன் பூங்காவில் உள்ள, ஏராளமான மரங்கள் பல ஆண்டுகள் பழமையானது. தற்போது பெரும்பாலான மரங்கள் பட்டு போய் உள்ளன. எந்த நேரத்திலும் வேருடன் சாயும் நிலையில், மரங்கள் உள்ளன.

பெங்களூரில் இன்னும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையவில்லை. கனமழை பெய்ய ஆரம்பித்தால், பூங்காவில் உள்ள மரங்கள் முறிந்து விழும் நிலை ஏற்படலாம்.

காலை, மாலையில் மக்கள் நடைபயிற்சியில் ஈடுபடும் போது, மரம் முறிந்து விழுந்தால் அசம்பாவிதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் கப்பன் பூங்காவில் பட்டு போன மரங்களை கண்டறிந்து, வெட்டி அகற்ற வேண்டும் என்று மாநகராட்சிக்கு, நடைபயிற்சியில் ஈடுபடுவோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us