sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விரைவில் இரட்டை இயந்திர ஆட்சி: பா.ஜ., - எம்.எல்.ஏ., திட்டவட்டம்

/

விரைவில் இரட்டை இயந்திர ஆட்சி: பா.ஜ., - எம்.எல்.ஏ., திட்டவட்டம்

விரைவில் இரட்டை இயந்திர ஆட்சி: பா.ஜ., - எம்.எல்.ஏ., திட்டவட்டம்

விரைவில் இரட்டை இயந்திர ஆட்சி: பா.ஜ., - எம்.எல்.ஏ., திட்டவட்டம்


ADDED : ஏப் 14, 2024 07:10 AM

Google News

ADDED : ஏப் 14, 2024 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: ''தேர்தல் முடிந்ததும் கிரஹ ஜோதி, சக்தி, கிரஹ லட்சுமி திட்டம் நிறுத்தப்படும். லோக்சபா தேர்தலுக்கு பின் காங்கிரஸ் ஆட்சி கவிழும். விரைவில் மாநிலத்தில் இரட்டை இயந்திர ஆட்சி வரும்,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.

பெலகாவி ஹிண்டல்கா கிராமத்தில் நடந்த பா.ஜ., தொண்டர்கள் கூட்டத்தில் ரமேஷ் ஜார்கிஹோளி பேசியதாவது:

பெலகாவியில் காங்கிரஸ் தோற்பது உறுதி. இத்தொகுதியில் 2.50 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெகதீஷ் ஷெட்டர் வெற்றி பெறுவார். மஹாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் உள்ள ஐரோத்ரி முதல் பெலகாவி வரையிலான நீர்ப்பாசன திட்டத்தை மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், வாக்குறுதியை நம்பி, மோசமான ஆட்சியை கொண்டு வந்தீர்கள். இத்தேர்தலிலும் காங்கிரஸ் அரசின் பொய்யான வாக்குறுதிக்கு பலியாகாதீர்கள். தேர்தல் முடிந்ததும் கிரஹ ஜோதி, சக்தி, கிரஹ லட்சுமி திட்டம் நிறுத்தப்படும். லோக்சபா தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் ஆட்சி கவிழும். விரைவில் மாநிலத்தில் இரட்டை இயந்திர ஆட்சி வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

லட்சுமி ஹெப்பால்கர் குறித்து, ஒரு வார்த்தை கூட ரமேஷ் ஜார்கிஹோளி பேசவில்லை. மோடியை பிரதமராக்க வேண்டும் என்பதையே திரும்ப திரும்ப கூறினார்.






      Dinamalar
      Follow us