கோலாரில் 6 உள்ளாட்சிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம்
கோலாரில் 6 உள்ளாட்சிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம்
ADDED : ஆக 07, 2024 06:00 AM
கோலார்: கோலார் மாவட்டத்தில் கோலார், தங்கவயல், முல்பாகல் ஆகிய மூன்று நகராட்சிகள்; பங்கார்பேட்டை, மாலுார், சீனிவாசப்பூர் ஆகிய மூன்று டவுன் சபைகள் உள்ளன. இந்த ஆறு உள்ளாட்சிகளுக்கும் இரண்டாம் கட்ட தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு, கர்நாடக அரசு இடஒதுக்கீடு அறிவித்துள்ளது.
நகராட்சிகள்
கோலார்
தலைவர்: பி.சி.ஏ., எனும் பிற்படுத்தப்பட்டோர் 'ஏ' பிரிவு,௸
துணைத் தலைவர்: எஸ்.சி., பெண்.
தங்கவயல்
தலைவர்: எஸ்.சி., பெண்.
துணைத் தலைவர்: பி.சி.ஏ.,
முல்பாகல்
தலைவர்: பி.சி.ஏ., பெண்
துணைத் தலைவர்: எஸ்.சி., பெண்.
டவுன் சபைகள்
பங்கார்பேட்டை
தலைவர்: -எஸ்.சி., துணைத் தலைவர்-: பொது பெண்.
மாலுார்
தலைவர்:- பொது பெண்.துணைத் தலைவர்: எஸ்.சி., பெண்
சீனிவாசப்பூர்
தலைவர்: பொது ஆண்
துணைத் தலைவர்: எஸ்.சி., பெண்
இதன்படி கோலார் மாவட்ட உள்ளாட்சிகளில் மூன்று தலைவர்கள், ஐந்து துணைத் தலைவர்கள் பதவிகளை பெண்களே பிடிக்க உள்ளனர்.
தேர்தல் எப்போது?
உள்ளாட்சிகளான நகராட்சி, டவுன்சபைகளுக்கு இரண்டாம் கட்ட தலைவர், துணைத்தலைவர் இட ஒதுக்கீடு ஆகஸ்ட் 5 ம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்துவது குறித்து, கர்நாடக நகர மேம்பாட்டுத் துறை விரைவில் உத்தரவு பிறப்பிக்கும்.
- அக்ரம் பாஷா, கலெக்டர், கோலார்