sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'மாஜி' அமைச்சர் வீட்டில் அமலாக்க துறை 'ரெய்டு'

/

'மாஜி' அமைச்சர் வீட்டில் அமலாக்க துறை 'ரெய்டு'

'மாஜி' அமைச்சர் வீட்டில் அமலாக்க துறை 'ரெய்டு'

'மாஜி' அமைச்சர் வீட்டில் அமலாக்க துறை 'ரெய்டு'


ADDED : ஆக 29, 2024 02:38 AM

Google News

ADDED : ஆக 29, 2024 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லாரி, : வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் நாகேந்திரா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

கர்நாடக பழங்குடியினர் நலத் துறைக்கு உட்பட்ட, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் 94 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது பற்றி, அமலாக்கத்துறை விசாரிக்கிறது.

இந்த வழக்கில் பழங்குடியினர் நலத்துறை முன்னாள் அமைச்சர் நாகேந்திரா கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக பெங்களூரு, பல்லாரியில் உள்ள நாகேந்திராவின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது.

இந்நிலையில், நேற்று காலை 8:00 மணி முதல், பல்லாரியில் உள்ள நாகேந்திராவின் வீடு, கொப்பால், ராய்ச்சூரில் உள்ள அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது சில ஆவணங்களை அதிகாரிகள், பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணிகளை, அமலாக்கத்துறை ஆரம்பித்துள்ளது. இதனால் நாகேந்திராவுக்குச் சொந்தமான இடங்களில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us