ADDED : ஏப் 16, 2024 05:43 AM

ஷிவமொகா, : ''லோக்சபா தேர்தலில், முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, சுயேச்சையாக போட்டியிடுவதால், பா.ஜ., பலத்த அடி வாங்கும்,'' என காங்கிரஸ்எம்.எல்.ஏ., பேளூர் கோபால கிருஷ்ணா தெரிவித்தார்.
ஷிவமொகா சாகராவில் நேற்று அவர் கூறியதாவது:
ஷிவமொகாவில் சுயேச்சை வேட்பாளராகஈஸ்வரப்பா களமிறங்கி உள்ளார். ஆனால் அவர் களத்தில் இருப்பாரா, இல்லையா என்பது, ஏப்ரல் 19க்கு பின் தெரியும். ஒருவேளை இவர் களத்தில் தங்கினாலும், காங்கிரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை. பா.ஜ.,தான் பலத்த அடிவாங்கும். இந்த கட்சிக்கு விழ வேண்டிய ஓட்டுகள், ஈஸ்வரப்பாவுக்கு செல்லும். எனவே பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்படும்.
அரசியலில் யாருக்குமே, வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே அவரது திறமை என்ன என்பது தெரியும். ராகவேந்திரா முதன் முறையாக போட்டியிட்ட போது, அவரது சாதனை எதுவும் இருக்கவில்லை. அது போன்று கீதா சிவராஜ்குமாருக்கு, ஒரு முறை வாய்ப்பு அளித்தால், அவரும் தன் திறமையை நிரூபிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.

