sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாம்பு கடித்து விவசாயி பலி

/

பாம்பு கடித்து விவசாயி பலி

பாம்பு கடித்து விவசாயி பலி

பாம்பு கடித்து விவசாயி பலி


ADDED : மே 29, 2024 04:17 AM

Google News

ADDED : மே 29, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கமகளூரு,: பாம்பு கடித்தது தெரியாமல் அலட்சியமாக இருந்த விவசாயி உயிரிழந்தார்.

சிக்கமகளூரு, தரிகெரேவின் கரகுச்சி கிராமத்தில் வசித்தவர் விவசாயி கங்கப்பா, 58. இவர் நேற்று முன்தினம் மாலை, வயலில் பணியாற்றியபோது, காலில் இரண்டு முறை பாம்பு கடித்தது.

அக்கம், பக்கம் சுற்றி பார்த்தும் பாம்பு தென்படவில்லை. முள் குத்தியிருக்கும் என, நினைத்து பணியை தொடர்ந்தார்.

வீட்டுக்கு திரும்பியபோது, உடல் சோர்வு ஏற்பட்டது. குடும்பத்தினர் கேட்டபோது, ஏதோ முள் குத்திவிட்டது. இதனால் சோர்வாக உள்ளது என, கூறினார். உணவு சாப்பிட்டு விட்டு உறங்கினார்.

பாம்பு விஷம் தலைக்கு ஏறியதில், விவசாயி உயிரிழந்தார். அப்போதுதான் குடும்பத்தினருக்கு, கங்கப்பாவை பாம்பு கடித்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us