sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபர் தற்கொலை முயற்சி

/

பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபர் தற்கொலை முயற்சி

பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபர் தற்கொலை முயற்சி

பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபர் தற்கொலை முயற்சி


ADDED : செப் 12, 2024 11:39 PM

Google News

ADDED : செப் 12, 2024 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு : பாலக்காடு அருகே, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர், விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, ஆபத்தான நிலையில் உள்ளார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோடு பகுதியைச் சேர்ந்த பெண், நேற்று முன்தினம் காலை, பசு மாடுகளுக்கு புல் அறுக்க தோட்டத்துக்கு சென்றார். அப்போது எலப்புள்ளி கொட்டில்பாறை பகுதியைச் சேர்ந்த சைமன், 31, என்பவர் பெண்ணை பின்தொடர்ந்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.

தப்பிக்க முயன்ற பெண்ணை, புல் அறுக்க பயன்படுத்தும் கத்தியால் குத்தி விட்டு, சைமன் தலைமறைவானார். படுகாயம் அடைந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள், அவரை மீட்டு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக, பாலக்காடு புதுச்சேரி (கசபா) போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சைமனை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, சைமன் அவரது வீட்டின் அருகில், விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சோர்வடைந்த நிலையில் மயங்கி கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். சைமன் ஆபத்தில் இருந்து மீளவில்லை என, டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us