ADDED : ஜூன் 08, 2024 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு, : பழைய பொருட்கள் சேகரித்து வைத்திருந்த குடோனில், விஷவாயு கசிந்து ஐந்து பேர் மயங்கி விழுந்தனர்.
மைசூரின் ஹளே கெசரே கிராமத்தில் பழைய இரும்பு பொருட்கள் சேகரித்து வைக்கும் குடோன் உள்ளது. நேற்று மாலை இந்த குடோனில் விஷவாயு கசிந்தது. இங்கிருந்த ஐந்து பேர், மயங்கி விழுந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர்.
தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், போலீசார் குடோனில் விஷவாயு கசியாமல் தடுக்க, நடவடிக்கை எடுத்தனர்.