sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பங்குச்சந்தை முதலீடு பெயரில் முதியவரிடம் ரூ.31 லட்சம் மோசடி

/

பங்குச்சந்தை முதலீடு பெயரில் முதியவரிடம் ரூ.31 லட்சம் மோசடி

பங்குச்சந்தை முதலீடு பெயரில் முதியவரிடம் ரூ.31 லட்சம் மோசடி

பங்குச்சந்தை முதலீடு பெயரில் முதியவரிடம் ரூ.31 லட்சம் மோசடி


ADDED : ஆக 07, 2024 11:58 PM

Google News

ADDED : ஆக 07, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப்ரீத் விஹார்: கிழக்கு டில்லியின் ப்ரீத் விஹார் பகுதியில் தன் மகள் திருமணத்திற்காக சேமித்து வைத்த 31 லட்சம் ரூபாயை இழந்த முதியவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

ப்ரீத் விஹார் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர், தன் இளைய மகள் திருமணத்திற்காக 31 லட்ச ரூபாய் சேமித்து வைத்திருந்தார். மேலும் பணம் தேவைப்பட்டது. சமூக வலைதளங்களில் வெளியான விளம்பரத்தைப் பார்த்து, ஒரு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி அவர்கள் விளம்பரம் செய்திருந்தனர். அதை நம்பி, முதலில் 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தார். லாபத்துடன் அவர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுத்தனர்.

அவர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டதால், மேலும் 31.56 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். சில வாரங்களில் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர், சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவக்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us