ADDED : ஏப் 25, 2024 04:01 AM

பெங்களூரு : போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டியின் மகள் சவும்யாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பி.எம்.டி.சி., பஸ்கள் பயன்படுத்தப்படுவதாக, பா.ஜ., அதிருப்தி தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலில், பெங்களூரு தெற்கு தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக தேஜஸ்வி சூர்யா, காங்கிரஸ் சார்பில் போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி மகள் சவும்யா போட்டியிடுகின்றனர்.
போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி, பி.எம்.டி.சி., பஸ்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் நேற்று பா.ஜ., கூறியுள்ளதாவது:
தன் மகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, அமைச்சர் ராமலிங்கரெட்டி பி.எம்.டி.சி., பஸ்களை பயன்படுத்துகிறார். மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்த பின், இப்போது அரசு பஸ்களை பயன்படுத்துகின்றனர்.
பொதுமக்களின் சேவைக்காக ஒதுக்கப்பட்ட அரசு பஸ்களை, தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவது சரியல்ல. மாநில காங்கிரஸ் அரசு செய்யும் முறைகேடுகள் குறித்து, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

