sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தவர்

/

மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தவர்

மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தவர்

மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தவர்


ADDED : ஜூன் 11, 2024 10:39 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜய நகர் : ஹொசஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த வாலிபரை, அங்கிருந்த மெட்ரோ ஊழியர்காப்பாற்றினார்.

வழக்கம் போல், நேற்று பெங்களூரு ஹொசஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தில், ரயிலுக்காக பயணியர் காத்திருந்தனர். ரயில் வரும் போது திடீரென ஒருவர், ரயில் தண்டவாளத்தில் குதித்தார்.

இதை பார்த்த ஒரு மெட்ரோ ஊழியர், 'எமர்ஜென்சி டிரிப் சிஸ்டம்' பட்டனை அழுத்தி ரயிலை நிறுத்தினார். அந்நபரை மீட்ட ஊழியர்கள், பயணியர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது தொடர்பாக விஜயநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்து அவரிடம் விசாரித்தனர்.

தற்கொலைக்கு முயற்சித்தவர், பசவேஸ்வர நகரில் வசிக்கும் சாகர், 25, என்பது தெரியவந்தது.

மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட இவர், பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.

நேற்று காலை வீட்டில் யாருக்கும் தெரிவிக்காமல், தனது மொபைல் போனையும் வீட்டில் வைத்து விட்டு, ஹொசஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து தற்கொலைக்கு முயற்சித்தது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

இச்சம்பவத்தால், அரை மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டு, மீண்டும் சீரானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us