sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முறையாக உணவு தயாரிக்காத விடுதி வார்டன் 'சஸ்பெண்ட்'

/

முறையாக உணவு தயாரிக்காத விடுதி வார்டன் 'சஸ்பெண்ட்'

முறையாக உணவு தயாரிக்காத விடுதி வார்டன் 'சஸ்பெண்ட்'

முறையாக உணவு தயாரிக்காத விடுதி வார்டன் 'சஸ்பெண்ட்'


ADDED : ஆக 18, 2024 11:31 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிவமொகா: விடுதி மாணவியருக்கு முறையான உணவு தயாரிக்காத வார்டனை, 'சஸ்பெண்ட்' செய்யுமாறு, காங்., - எம்.எல்.ஏ., பேலுார் கோபாலகிருஷ்ணா உத்தரவிட்டார்.

ஷிவமொகா மாவட்டம், ஹொசநகரின் ரிப்பன்பேட்டில் பொது பிரீ மெட்ரிக் பெண்கள் விடுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் சாகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பேலுார் கோபாலகிருஷ்ணா திடீரென ஆய்வு நடத்தினார்.

விடுதியில் தங்கியிருந்த மாணவியரிடம், வசதிகள், தயாரிக்கப்படும் உணவுகள் குறித்து விசாரித்தார். பின், அங்கிருந்து சமையல் அறைக்கு சென்ற, எம்.எல்.ஏ., மாணவியருக்கு இன்றைய தினம் வழங்கப்படும் உணவு குறித்து கேட்டார். 'மதியம் கேழ்வரகு களி உருண்டை தானே தர வேண்டும். ஏன், மெனுப்படி உணவு தயாரிக்கவில்லை' என கேட்டார்.

வார்டன் இந்திரா, சரியான பதில் அளிக்காததால், தன்னுடன் வந்திருந்த அதிகாரிகளிடம், இந்திராவை சஸ்பெண்ட் செய்யும்படி உத்தரவிட்டார். அத்துடன் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட பேலுார் கோபால கிருஷ்ணா, மற்ற ஊழியர்களுக்கும் நோட்டீஸ் வழங்கி, விளக்கம் கேட்குமாறும் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us