sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மனவளர்ச்சி குன்றிய சிறுமி கர்ப்பம் ஹோட்டல் ஊழியருக்கு 106 ஆண்டுகள் சிறை

/

மனவளர்ச்சி குன்றிய சிறுமி கர்ப்பம் ஹோட்டல் ஊழியருக்கு 106 ஆண்டுகள் சிறை

மனவளர்ச்சி குன்றிய சிறுமி கர்ப்பம் ஹோட்டல் ஊழியருக்கு 106 ஆண்டுகள் சிறை

மனவளர்ச்சி குன்றிய சிறுமி கர்ப்பம் ஹோட்டல் ஊழியருக்கு 106 ஆண்டுகள் சிறை


ADDED : ஏப் 30, 2024 08:32 PM

Google News

ADDED : ஏப் 30, 2024 08:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் தலப்பள்ளி சேலக்கரையைச் சேர்ந்த பத்மநாபன் என்ற பிரதீப், 44, மூணாறு அருகே அடிமாலியில், தனியார் ஹோட்டல் பணியாளர். அங்கு உடன் வேலை செய்த திருமணம் ஆன பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, பெண்ணின் வீட்டில் தங்கினார்.

அப்பெண்ணின் மன வளர்ச்சி குன்றிய, 15 வயது மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த அவர், வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, அடிமாலி மருத்துவமனைக்கு அவரது தாய் அழைத்து சென்றார். சிறுமி கர்ப்பமுற்றிருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

இடுக்கி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. பிரதீப் குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுத்ததால் அவருக்கும், சிறுமிக்கும் டி.என்.ஏ., பரிசோதனை நடத்தப்பட்டு, சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது உறுதியானது.

பிரதீப்பை போலீசார் கைது செய்தனர்.

தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிராஜுதீன் வழக்கை விசாரித்து, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் பிரதீப்புக்கு, 106 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2.6 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us