sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இடுகாடு நிலம் ஆக்கிரமிப்பு இளைஞர் சங்கம் கண்டனம்

/

இடுகாடு நிலம் ஆக்கிரமிப்பு இளைஞர் சங்கம் கண்டனம்

இடுகாடு நிலம் ஆக்கிரமிப்பு இளைஞர் சங்கம் கண்டனம்

இடுகாடு நிலம் ஆக்கிரமிப்பு இளைஞர் சங்கம் கண்டனம்


ADDED : மே 11, 2024 06:53 AM

Google News

ADDED : மே 11, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: 'கிராமத்தில் இடுகாடு வசதி வேண்டும்' என, தாலுகா அலுவலகத்தில் இளைஞர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

தங்கவயலின் ஜக்ராச குப்பா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட குருபூர் கிராமத்திற்கு இடுகாட்டுக்கு, அரசு நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, இறந்தவர்களின் உடலை புதைக்க விடாமல் தடுத்து தகராறு செய்கின்றனர்.

இக்கிராமத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்த லட்சுமம்மா என்பவரின் உடலை புதைக்க விடாமல் தடுத்து தகராறு செய்தனர்.

கிராம மக்கள் ஒருங்கிணைந்து போலீசார் உதவியுடன் உடலை அடக்கம் செய்தனர். எனவே, இடுகாடு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேற்று தாலுகா அலுவலகத்தில் குருபூர் கிராம இளைஞர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

சங்கத் தலைவர் மஞ்சுநாத் கூறுகையில், ''ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து ஏற்கனவே மனு அளித்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறினால் தாசில்தார் மீது கோலார் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்வோம்,'' என்றார்.

சீனிவாஸ், ஸ்ரீநாத்ரெட்டி, சுப்பிரமணியா, ரகுநாத், மது, ஆனந்த ரெட்டி உட்பட பலர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us