sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பத்திரிகை நிருபர் சுட்டுக்கொலை; உ.பி.,யில் அதிர்ச்சி

/

பத்திரிகை நிருபர் சுட்டுக்கொலை; உ.பி.,யில் அதிர்ச்சி

பத்திரிகை நிருபர் சுட்டுக்கொலை; உ.பி.,யில் அதிர்ச்சி

பத்திரிகை நிருபர் சுட்டுக்கொலை; உ.பி.,யில் அதிர்ச்சி

4


ADDED : மார் 08, 2025 07:08 PM

Google News

ADDED : மார் 08, 2025 07:08 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பத்திரிகை நிருபர் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகை நிருபரான ராகவேந்திரா பாஜ்பாய், சிதபூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர், அவரது பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

கீழே விழுந்த பாஜ்பாயை துப்பாக்கியால் இருமுறை சுட்டு விட்டு தப்பியோடியுள்ளார். நெஞ்சு மற்று தோள்பட்டை பகுதியை குண்டு துளைத்த நிலையில், அவர் அங்கேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு உடனடியாக நேரில் சென்றுள்ளனர். பின்னர், பாஜ்பாயின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராகவேந்திரா பாஜ்பாய்க்கு ஒரு மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது






      Dinamalar
      Follow us