sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்சுலின் கேட்ட கெஜ்ரிவால்: மறுத்த சிறை நிர்வாகம்

/

இன்சுலின் கேட்ட கெஜ்ரிவால்: மறுத்த சிறை நிர்வாகம்

இன்சுலின் கேட்ட கெஜ்ரிவால்: மறுத்த சிறை நிர்வாகம்

இன்சுலின் கேட்ட கெஜ்ரிவால்: மறுத்த சிறை நிர்வாகம்

18


ADDED : ஏப் 22, 2024 05:24 PM

Google News

ADDED : ஏப் 22, 2024 05:24 PM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நான் இன்சுலின் கேட்கவில்லை என திஹார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளது என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்க்கரை நோயாளியான கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்தும் சிறை நிர்வாகம் அதை வழங்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி இருந்தது. கெஜ்ரிவால் இன்சுலின் கேட்கவில்லை என சிறை நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

புகார்

இந்நிலையில், நான் இன்சுலின் கேட்கவில்லை என திஹார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளது என சிறை கண்காணிப்பாளருக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‛‛என் சர்க்கரை அளவு ஒரு நாளைக்கு மூன்று முறை மிக அதிகமாக உள்ளதால், நான் தினமும் இன்சுலின் கேட்கிறேன்.

ஆனால் திஹார் நிர்வாகம் நான் இன்சுலின் கேட்கவில்லை என கூறியதாக, செய்தித்தாளில் படித்ததும் வருத்தம் அடைந்தேன். நான் இன்சுலின் கேட்கவில்லை என திஹார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளது'' என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us