sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முல்லை பெரியாறில் புதிய அணை : கேரள அமைச்சர் உறுதி

/

முல்லை பெரியாறில் புதிய அணை : கேரள அமைச்சர் உறுதி

முல்லை பெரியாறில் புதிய அணை : கேரள அமைச்சர் உறுதி

முல்லை பெரியாறில் புதிய அணை : கேரள அமைச்சர் உறுதி

6


ADDED : ஆக 16, 2024 02:45 AM

Google News

ADDED : ஆக 16, 2024 02:45 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு,“தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும்,” என, கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷிஅகஸ்டின் பேசினார்.

கேரளாவின் இடுக்கி ஐ.டி.ஐ., மைதானத்தில் சுதந்திர தின விழா நடந்தது. இதில், கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:

இந்தியா மதச்சார்பின்மை அடிப்படையில் ஒற்றுமையுடன் இயங்குகிறது. இந்த ஒற்றுமை நாட்டை பலப்படுத்துகிறது. மதத்தின் பெயரால் சமூகத்தை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டோம். இடுக்கி மாவட்டம் இயற்கை பேரிடர் சவால்களை பெரிதும் எதிர்கொண்டுள்ளது.

முல்லைப் பெரியாறில் புதிய அணை வேண்டும் என்பது நம் கோரிக்கை.

தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய அணை கட்ட வேண்டும். அணை பெயரில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக கூறி, அங்கு புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை கேரளாவில் வலுத்துள்ள நிலையில், அணை பலமாக உள்ளதாக ஆய்வு செய்த நிபுணர் குழுக்கள் தெரிவித்துள்ளன.

எனினும், அங்கு புதிய அணை கட்டக்கூடாது என, தமிழக அரசு மற்றும் விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வயநாடுக்கு ஆரஞ்சு அலெர்ட்

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுநிலை போன்ற சூழல் உருவாகி உள்ளதால், கேரள மாநிலம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே நிலை, வரும் 19ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சமீபத்தில் நிலச்சரிவால் கடும் பாதிப்புகளை சந்தித்த வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் அதீத கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. இப்பகுதிகளில், 11 செ.மீ., முதல் 20 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளது. இதுதவிர கேரளாவின் 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பத்தனம்திட்டா, இடுக்கி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்றும், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 'கேரளா, லட்சத்தீவு, கர்நாடக கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். மோசமான வானிலை நிலவுவதால் அப்பகுதிகளில் மீனவர்கள், வரும் 19ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, ஏழு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us