sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லோக்சபா தேர்தல் எதிரொலி 402 எஸ்.ஐ., தேர்வு ஒத்திவைப்பு

/

லோக்சபா தேர்தல் எதிரொலி 402 எஸ்.ஐ., தேர்வு ஒத்திவைப்பு

லோக்சபா தேர்தல் எதிரொலி 402 எஸ்.ஐ., தேர்வு ஒத்திவைப்பு

லோக்சபா தேர்தல் எதிரொலி 402 எஸ்.ஐ., தேர்வு ஒத்திவைப்பு


ADDED : மார் 22, 2024 07:02 AM

Google News

ADDED : மார் 22, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: லோக்சபா தேர்தல் எதிரொலியாக, அடுத்த மாதம் 8ம் தேதி நடக்க இருந்த, 402 எஸ்.ஐ., பணியிடங்களுக்கான, தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் காலியாக இருந்த 545 எஸ்.ஐ., பணியிடங்களுக்கு கடந்த 2021ல் தேர்வு நடந்தது. அதன் பின்னர் 402 பணியிடங்களை நிரப்பவும் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால் 545 எஸ்.ஐ., பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், முறைகேடு நடந்ததால், மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் 402 பணியிடங்களை நிரப்பும், தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கடந்த ஜனவரியில், 545 பணியிடங்களுக்கு, மறுதேர்வு நடந்தது. இதையடுத்து 402 பணியிடங்களை நிரப்ப, மே 8ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் இரண்டு கட்டமாக நடப்பதால், மே 8ம் தேதி நடக்க இருந்த, தேர்வை தேதி குறிப்பிடாமல் அரசு ஒத்தி வைத்து உள்ளது.






      Dinamalar
      Follow us