sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முதியவர் போல் வேடமிட்டு கனடா செல்ல முயன்றவர் கைது

/

முதியவர் போல் வேடமிட்டு கனடா செல்ல முயன்றவர் கைது

முதியவர் போல் வேடமிட்டு கனடா செல்ல முயன்றவர் கைது

முதியவர் போல் வேடமிட்டு கனடா செல்ல முயன்றவர் கைது


ADDED : ஜூன் 20, 2024 02:31 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வசந்த் விஹார்: போலி பாஸ்போர்ட் மூலம் முதியவர் போல் வேடமணிந்து, கனடாவுக்குச் செல்ல முயன்ற 24 வயது இளைஞர் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் நேற்று முன்தினம் மாலையில் ஒரு பயணியின் நடவடிக்கையில் சி.ஐ.எஸ்.எப்., அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர்.

அவரது பாஸ்போர்ட்டை வாங்கி பரிசோதித்தபோது, ரஷ்விந்தர் சிங் சஹோதா, 67, என்று தெரிந்தது. எனினும் அவரது நடவடிக்கைகள் விசித்திரமாக இருந்தது. அவரை தீவிர சோதனைக்கு உட்படுத்தியபோது, அவர் வயதான தோற்றத்தை செயற்கையாக உருவாக்கியது தெரியவந்தது.

அனைத்தையும் கலைத்த அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர். குரு சேவக் சிங், 24, என்பது தெரிய வந்தது. ஆள் மாறாட்டம் செய்து, போலி பாஸ்போர்ட்டில் கனடா செல்ல முயன்றதற்காக டில்லி போலீசில் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

அவர், எதற்காக முதியவர் போல் வேஷம் போட்டு, கனடா செல்ல முயன்றார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us