உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 17, 2024 09:39 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி:தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டில்லி மெட்ரோவின் ரெட்லைனில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
புல்பங்காஷ் மற்றும் பிரதாப் நகர் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து 'எக்ஸ்' சமூக வலைதளத்தின் தன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டில்லியின் ரிதாலாவை உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்துடன் இணைக்கும் வழித்தடம் ரெட் லைன் மெட்ரோ சேவை எனப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் நேற்று புல்பங்காஷிலிருந்து பிரதாப் நகர் வரையிலான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. மற்ற எல்லா வழித்தடங்களிலும் வழக்கமான சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
