sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கவயல் ஏ.ஆர்.டி.ஓ., அலுவலக கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க எம்.எல்.ஏ., உத்தரவு

/

தங்கவயல் ஏ.ஆர்.டி.ஓ., அலுவலக கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க எம்.எல்.ஏ., உத்தரவு

தங்கவயல் ஏ.ஆர்.டி.ஓ., அலுவலக கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க எம்.எல்.ஏ., உத்தரவு

தங்கவயல் ஏ.ஆர்.டி.ஓ., அலுவலக கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க எம்.எல்.ஏ., உத்தரவு


ADDED : பிப் 28, 2025 11:05 PM

Google News

ADDED : பிப் 28, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: ''தங்கவயலில் கட்டப்பட்டு வரும் உதவி ஆர்.டி.ஓ., அலுவலகம் கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,'' என, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா உத்தரவிட்டார்.

தங்கவயல், பங்கார்பேட்டை, மாலுார் ஆகிய மூன்று தாலுகாக்களுக்கு உட்பட்டதாக உதவி ஆர்.டி.ஓ. அலுவலகம் இதுநாள் வரையில், தங்கச்சுரங்க நிறுவனத்துக்கு உட்பட்ட தங்கவயல் கோரமண்டல் டோல்கேட் பகுதியில் உள்ள கட்டடத்தில் இயங்கி வந்தது.

பழமையான இக்கட்டடம் சரி இல்லாததால் மாற்று கட்டடம் தேவைப்பட்டது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெமல் நிறுவனத்திடம் பயன்படுத்தாமல் இருந்த 972 ஏக்கர் நிலத்தை மாநில அரசு பெற்றது.

இந்த நிலத்தில், பெமல் தொழிற்சாலை அருகே தங்கவயல் - பங்கார் பேட்டை சாலையில் பொன்மலை முருகன் கோவிலின் கிழக்கு பகுதியில் 5 ஏக்கரில் உதவி ஆர்.டி.ஓ., அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.

இதற்காக 10 கோடி ரூபாயில், கட்டடம், டிராக் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

கட்டுமானப் பணிகளை பார்வையிட தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா நேற்று சென்றார். உதவி ஆர்.டி.ஓ., நயாஸ் பாஷாவை அழைத்து விசாரித்தார்.

'கட்டுமானப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். கண்ட இடங்களில் குப்பை கொட்டப்பட்டு உள்ளது. இதை ஒழுங்குபடுத்த வேண்டும். கட்டடத்துக்கு பெயின்ட் அடிக்க வேண்டும்.

வேலைகளை பொறுப்பாக கவனிக்க வேண்டும். தரமான கட்டடமாக இருக்க வேண்டும். இப்பகுதி துாய்மையாக இருப்பதற்கு நீங்கள் தான் பொறுப்பு' என, எம்.எல்.ஏ., கூறினார்.

தங்கவயல் கிராமப்பகுதி பிளாக் காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ண ரெட்டி, 'குடா' எனும் தங்கவயல் மேம்பாட்டு குழும முன்னாள் தலைவர் அப்பி ரெட்டி, தங்கவயல் தாலுகா ஏ.பி.எம்.சி., தலைவர் விஜயராகவ ரெட்டி ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.






      Dinamalar
      Follow us