sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'பிளாட்'டுக்காக பெண்ணை கொல்ல முயன்ற கணவர், நாத்தனாருக்கு சிறை

/

'பிளாட்'டுக்காக பெண்ணை கொல்ல முயன்ற கணவர், நாத்தனாருக்கு சிறை

'பிளாட்'டுக்காக பெண்ணை கொல்ல முயன்ற கணவர், நாத்தனாருக்கு சிறை

'பிளாட்'டுக்காக பெண்ணை கொல்ல முயன்ற கணவர், நாத்தனாருக்கு சிறை


ADDED : ஜூலை 07, 2024 03:00 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: டில்லியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார், 40. இவர் அனுசிங், 35, என்பவரை காதலித்து 2008ல் திருமணம் செய்து கொண்டார். தம்பதி பெங்களூருக்கு வந்து, நந்தினி லே -- அவுட்டில் வசிக்க துவங்கினர். சஞ்சீவ் குமாரின் தங்கை காஞ்சனாவும், இவர்களுடன் வந்தார்.

டில்லியில் அனுசிங்குக்கு சொந்தமான பிளாட் உள்ளது. இதை தன் பெயருக்கு எழுதி வைக்கும்படி, சஞ்சீவ் குமார் மனைவியை கட்டாயப்படுத்தினார்; அடித்து கொடுமைப்படுத்தினார். தன் தங்கையுடன் சேர்ந்து, 2013 மே மாதம் கழுத்தை நெரித்தும், தலையை சுவரில் மோதியும் அனுசிங்கை கொலை செய்ய முயற்சித்தனர்.

அக்கம் பக்கத்தினரால் காப்பாற்றப்பட்ட அனுசிங், நந்தினி லே - அவுட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், சஞ்சீவ் குமாரையும், அவரது தங்கை காஞ்சனாவையும் கைது செய்தனர். பெங்களூரின் 71வது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

குற்றம் உறுதியானதால், அண்ணன், தங்கைக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் நேற்று முன் தினம் தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 1.50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us