sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை: மத்திய அரசு

/

இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை: மத்திய அரசு

இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை: மத்திய அரசு

இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை: மத்திய அரசு

2


ADDED : ஆக 18, 2024 02:23 AM

Google News

ADDED : ஆக 18, 2024 02:23 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை; பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என, மத்திய சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.

ஆப்ரிக்காவில் வேகமாக பரவி வரும், 'மங்கி பாக்ஸ்' எனப்படும் குரங்கு காய்ச்சல் பரவலை, உலகளவில் கவலை அளிக்கக்கூடிய பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. ஆப்ரிக்க நாடுகளில் கடந்த ஆண்டு ஜனவரி முதல், மங்கி பாக்ஸ் பரவல் மிக மோசமாக உள்ளன. இதுவரை 27,000 தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. 1,100 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதை தொடர்ந்து, மங்கி பாக்ஸ் தொற்றை சர்வதேச அளவில் கவலை அளிக்கக்கூடிய தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக சர்வதேச அளவிலான சுகாதார அவசர நிலையையும் அறிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா தலைமையிலான ஆலோசனை கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. அப்போது, குரங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:

குரங்கு காய்ச்சல் தொடர்பான அவசர நிலை எச்சரிக்கை, கடந்த 2022ல் ஐ.நா., சபை வெளியிட்டது முதல், தற்போது வரை நம் நம் நாட்டில், 30 பேருக்கு மட்டுமே இந்த அறிகுறி தென்பட்டது. கடைசியாக கடந்த மார்ச்சில், குரங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்த நபருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நாட்டில் யாருக்கும் குரங்கு காய்ச்சல் அறிகுறி இல்லை. இருப்பினும், நிலைமையை சுகாதார அமைச்சகம் கூர்ந்து கவனித்து வருகிறது.

எந்த நேரத்திலும் பரவல் அதிகரிக்கும் என்பதால், அதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எல்லைப் பகுதியில் சோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துறைமுகம், விமான நிலையங்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்வீடனிலும் பாதிப்பு

ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் உள்ள ஒரு நபர், மங்கி பாக்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'இதன் வாயிலாக, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் மங்கி பாக்ஸ் தொற்று வேகமாக பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது' என, பொது சுகாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். எனினும், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இதுவரை மங்கி பாக்ஸ் தொற்றால் யாரும் பாதிக்கவில்லை என்றும், இருப்பினும் அதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாகவும் அந்நாடுகளின் சுகாதாரத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.








      Dinamalar
      Follow us